ECONOMYSELANGORTOURISM

ஷா ஆலமில் நாளை தொடங்கி இசை நீரூற்று நிகழ்வு

ஷா ஆலம், மே 5- நோன்புப் பெருநாளை முன்னிட்டு இங்குள்ள லாமான் புடாயாவில் நாளை தொடங்கி இசை நீரூற்று நிகழ்வை ஷா ஆலம மாநகர் மன்றம் நடத்தவிருக்கிறது.

இந்த நோன்புப் பெருநாள் ஒளியூட்டு நிகழ்வு வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் இரவு 9.45 மணி முதல் இரவு 10.15 மணி வரையிலும் இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்று மாநகர் மன்றம் தெரிவித்தது.

நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்கும் வகையில் நோன்புப் பெருநாள் பாடல் இசைக்கேற்ப நீரூற்று ஜாலமிடும் அற்புதக் காட்சியைக் காண வாருங்கள் என தனது பேஸ்புக் பதிவில் அது குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டில் அமைக்கப்பட்ட இந்த இந்த இசை நீரூற்று ஷா ஆலம் மாநகரின் கவர்ச்சிகரமான சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.


Pengarang :