ECONOMYSELANGOR

பெ.ஜெயா மாநகர் மன்றத்தின் நோன்புப் பெருநாள் உபசரிப்பு- மே 20 ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், மே 18- பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மலேசிய மாநிலங்களின் உணவு எனும் கோட்பாட்டில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை இம்மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடத்துகிறது.

இந்த விருந்து நிகழ்வு பெட்டாலிங் ஜெயா, செக்சன் 52, ஜாலான் யோங் சூக் லின்னில் உள்ள போலவார்ட் சதுக்கத்தில் நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவு கூறியது.

இந்த பொது உபசரிப்பில் நாசி டாகாங், மீ கோலேக், ரோஜாக், லெமாங், சார் கோய்தியோ, சாத்தே, வறுத்த இளம் ஆடு, பழ வகைகள் பரிமாறப்படும்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த விருந்து நிகழ்வில் உள்நாட்டு கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறுவதோடு ராயா பண அன்பளிப்பு வழங்குவது உள்ளிட்ட ஜனரஞ்சக நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்திற்கும் குடியிருப்பாளர்களுக்குமிடையே அணுக்கமான உறவை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக அப்பிரிவு அறிக்கை ஒன்றின் வாயிலாக கூறியது.

இந்த நோன்புப் பெருநாள பொது உபசரிப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக திரளாக வந்து இதில் கலந்து கொள்ளும்படி பெட்டாலிங் ஜெயா வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


Pengarang :