ECONOMYSELANGOR

இன்று இரவு பண்டார் பாரு சாலாக் திங்கி, பிபிஎஸ்தி வாக்கில் மாநில திறந்த இல்ல உபசரிப்பு

ஷா ஆலாம், 18 மே: ஒன்பது மாவட்டங்களில் நடக்கும்  சிலாங்கூர் மாநில அரசின் ஹரி ராயா பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு  இன்று சிப்பாங்கில் உள்ள பண்டார் பாரு சாலாக் திங்கி, பிபிஎஸ்தி வாக்கில் நடைபெறும்.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி டூயட் ராயா வழங்குதலுடன் நடைபெறும்.

கோவிட் -19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக  ரத்து செய்யப்பட்ட  இது போன்ற நிகழ்வுகள் பொதுமக்களைக் கவரும் வகையில் மே 15 முதல் 21 வரை மாநிலம் முழுவதற்கும் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.


Pengarang :