ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

உலு சிலாங்கூரில் வெள்ளக் கழிவுகளை சேகரிப்பதற்கு கேடிஇபி கழிவு மேலாண்மை தயார்

ஷா ஆலம், 18 மே: உலு சிலாங்கூரில் வெள்ளக் கழிவுகளை சேகரிப்பதற்கு வசதியாக கேடிஇபி கழிவு மேலாண்மை (KDEBWM) ரோல் ஓன் ரோல் ஓப் (RORO) தொட்டிகளை வழங்கியுள்ளது.

கம்பஉலு சிலாங்கூரில் வெள்ளக் கழிவுகளை சேகரிப்பதற்கு கேடிஇபி கழிவு மேலாண்மை ோங் ஜாவாவில் மூன்று தொட்டிகள் உள்ளன, அதே நேரத்தில் கம்போங் ஆயர் பன்னாஸ், கம்போங் பாசிர் மற்றும் கோலா குபு பாரு மினி ஸ்டேடியம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொட்டி வீதம் வழங்கப் பட்டுள்ளதாக  அதன் ஊடகங்கள் மற்றும் மக்கள் தொடர்புத் தலைவர் கூறுகிறார்.

“உலு சிலாங்கூரில் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கேடிஇபி கழிவு மேலாண்மை பொருட்கள் மற்றும் மனிதவளத்தைத் திரட்டியுள்ளது” என்று மாபுசா முகமட் தர்மிடி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சில பகுதிகளில் மதியம் 1 மணி நிலவரப்படி 12 டன்கள் வெள்ளக் கழிவுகளை வெளியேற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

அவர் கூறுகையில், மொத்தமாக குப்பைகளை அகற்றும் குடியிருப்பாளர்கள் இன்னும் இருப்பதால் இந்த நடவடிக்கை மூன்று நாட்கள் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கேடிஇபி கழிவு மேலாண்மை மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்களுடன் சேர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப்படுத்தும் பணிகளை முடிப்பதில் அனைத்து முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் தொடர்ந்து வழங்கும்” என்று அவர் கூறினார்.


Pengarang :