ECONOMYMEDIA STATEMENT

இறுதிச் சடங்கிலும் ஊழல்- இரு மருத்துவ உதவியாளர்களுக்கு 5 நாள் தடுப்புக் காவல்

ஷா ஆலம், மே 27- நல்லடக்கச் சடங்குகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளுக்காக 15,000 வெள்ளி வரை லட்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் மருத்துவ உதவியாளர்கள் இருவர் விசாரணைக்காக ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும் வரும் மே 31 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) செய்து கொண்ட மனுவை மாஜிஸ்திரேட் நோர் ஃபைஸா அப்துல் சானி ஏற்றுக் கொண்டு தடுப்புக் காவல் அனுமதியை வழங்கினார்.

கையூட்டு பெற்ற குற்றத்திற்காக 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின்  17(ஏ) பிரிவின் கீழ் 40 மற்றும் 42 வயதுடைய அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று மா 4.45 மணியளவில் இங்குள்ள சிலாங்கூர் மாநில எம்.ஏ.சி.சி. தலைமையகத்திற்கு வந்த போது அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.


Pengarang :