ECONOMYSELANGOR

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,629 பேருக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உதவி

கோலாலம்பூர், ஜூலை 1- நிறுவன சமூக கடப்பாட்டுத் திட்டத்தின் (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களின் வாயிலாக கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 1,629 பேருக்கு பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது.

“ஒன்று சேர்ந்து முன்னேறுவோம்“ எனும் திட்டத்தின் வாயிலாக உணவுப் பொட்டல அன்பளிப்பு, குழாய் பழுதுபார்ப்பு பயிற்சி வழங்குவது, குழாய்களை பழுதுபார்ப்பது, முகக்கவசம் வழங்குவது பிள்ளைகளுக்கு இணைய வழி கல்வி வழங்குவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.

இந்த சி.எஸ்.ஆர். திட்டத்தின் வாயிலாக மொத்தம் 450,705 வெள்ளி மதிப்பிலான உதவிகளை குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு வழங்கியுள்ளோம் என்று அவர் சொன்னார்.

இங்குள்ள தி வெர்ட்டிக்கல் பங்சார் சவுத் சிட்டியில் நேற்று ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நீடித்த நீர் வளம் மீதான அறிக்கையை தாக்கல் செய்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான மலேசிய தொழில்நுட்ப விருதளிப்பு நிகழ்வில் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் சிறந்த பயனீட்டாளர் மோபைல் செயலி பிரிவில் இந்நிறுவனம் விருதைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுஹாய்மி தெரிவித்தார்.


Pengarang :