புத்ராஜெயா, ஜூலை 3: 2022 ஆம் ஆண்டிற்கான படிவம் ஆறு நுழைவுக்கான முடிவுகள் வரும் வியாழக்கிழமை (ஜூலை 7) அறிவிக்கப்படும்.
2021 ஆம் ஆண்டில் சிஜில் பெலாஜாரன் மலேசியா (எஸ்.பி.எம்) முடித்த மாணவர்கள் 2022 ஆம் ஆண்டில் படிவம் ஆறு நுழைவுக்கான முடிவுகளை ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் மதிப்பாய்வு செய்யலாம் என்று கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் /sst6.moe.gov .my/ அகப்பக்கம் அல்லது தங்களின் பள்ளிகள் மூலம் நுழைவுக்கான முடிவுகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
“2021 இல் எஸ்.பி.எம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஆறாம் படிவம் நுழைவு அனுமதி பெறாதவர்கள், 2022 ஜூலை 7 முதல் 24 வரை https://sst6.moe.gov.my/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் மேல்முறையீட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.
“இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு, தங்களின் பள்ளிகள் மூலம் மேல்முறையீடு செய்யலாம்,” என்றார்.
கல்வி அமைச்சகத்தின் படி, படிவம் ஆறு முதல் தவணைக்கான, மேல்முறையீட்டு விண்ணப்பத்தின் முடிவு ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று அதே போர்டல் மூலம் அறிவிக்கப்படும், அதே சமயம் இணைய அணுகல் இல்லாத மாணவர்களுக்கு, மேல்முறையீட்டு விண்ணப்பத்தின் முடிவு அதே தேதியில் பள்ளிகள் மூலம் அறிவிக்கப்படும்.
ஆறாம் படிவத்திற்கு நுழைய அனுமதி கிடைத்த மாணவர்கள் ஜூலை 25, 2022 அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரிகள் அல்லது ஆறாம் படிவ மையங்களில் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
மேல்முறையீடு செய்திருக்கும் மாணவர்கள், ஆகஸ்ட் 2, 2022 ஆம் தேதி தங்களைப் பதிந்துக் கொள்ளலாம்.