MEDIA STATEMENTUncategorized @taWANITA & KEBAJIKAN

12 வயது பெண் பாலியல் பலாத்காரம்- அந்நிய நாட்டு தம்பதியர் கைது

ஷா ஆலம், செப் 4- பன்னிரண்டு வயது பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அந்நிய நாட்டு தம்பதியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக தன் மகள் மனோ ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதை கண்ட அவரின் தந்தை இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் செய்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.

எங்களுக்கு தொல்லை கொடுத்தால் உங்கள் மகளை கொலை செய்து விடுவோம் என கைது செய்யப்பட்டவரின் மனைவி பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயாரை மிரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும் கடை வீட்டில் உள்ள அறைகளில் வாடகைக்கு தங்கியுள்ளதாக கூறிய அவர், அப்பெண் குளிக்கையில் சந்தேகப் பேர்வழி பல முறை ஒளிந்திருந்து பார்த்துள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த புகாரைத் தொடர்ந்து தாமான் புத்ராவில் உள்ள கடை வீடொன்றில் அதிரடி சோதனை நடத்திய போலீசார்  ஐ.நா.வின் அதிகளுக்கான அட்டையை வைத்திருக்கும் மியன்மார் நபரையும் இந்தோனேசியரான அவரின் மனைவியையும் கைது செய்தனர் என்றார் அவர்.


Pengarang :