ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTSELANGORYB ACTIVITIES

கடந்து வந்த பயணத்தை நினைவு கூறும் தருணம்- மந்திரி புசாரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து 

ஷா ஆலம், டிச 24- கடந்து வந்த மற்றும் தொடர வேண்டிய பயணத்தை நினைவு கூறும் தருணமாக கிறிஸ்துமஸ் விழா காலம் திகழ்வதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அண்மையில் பத்தாங் காலியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 92 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

மாநில, மத்திய அரசுகளுக்கிடையே தற்போது காணப்படும் அணுக்கமான ஒத்துழைப்பின் வாயிலாக பருவநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளக் கூடிய திட்டங்களை விரைந்து மேற்கொள்வதற்கு அரிய வாய்ப்பு சிலாங்கூருக்கு கிடைக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மலேசியர்கள் குறிப்பாக சிலாங்கூர் மக்கள் தயாராகி வரும் இவ்வேளையில் இவ்வாண்டில் கடந்த வந்த பாதையை அவர்கள் நினைவுக் கூர்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஓராண்டு கால பயணத்தை நாம் நினைவுக்கூரும் தருணம் இது. ஒரு சிலருக்கு மற்றவர்களை விட சிறப்பான பயணமாக அமைந்திருக்கும். ஒரு சிலருக்கு புதிய ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய படிப்பினையை இந்த நடப்பு ஆண்டு தந்திருக்கும் என்றார் அவர்.


Pengarang :