ANTARABANGSA

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, ஜன 17 – நேற்று அதிகாலை இந்தோனேசியாவின் ஆச்சே மற்றும் வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மேடானில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் உறுதிப்படுத்தியது.

தூதரக உதவி தேவைப்படுவோர் அல்லது வேறு ஏதேனும் விவரங்கள் அறிய மலேசியர்கள் மேடானில் உள்ள மலேசியத் தூதரகத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்: +62 61 4531342 மற்றும் +62 61 4523992 அல்லது மின்னஞ்சல்: [email protected] அனுப்பலாம்.

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் திங்கள்கிழமை அதிகாலை 5.20 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுவரை, உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை மற்றும் உள்கட்டமைப்பு சேதம் இன்னும் அதிகாரிகளால் மதிப்பிடப்படுகிறது.

ஊடகச் செய்திகளின்படி, அருகில் உள்ள வடக்கு சுமத்ரா மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :