பிப்ரவரி 2 முதல் 8 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் மாற்றம் இல்லை

கோலாலம்பூர், பிப் 2: பிப்ரவரி 2 முதல் 8 வரையிலான காலப்பகுதியில் RON97, RON95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லறை விலையில் எந்த மாற்றமும் இல்லை.

நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், RON97 லிட்டருக்கு RM3.35, RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) என்ற அளவில் உள்ளது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95 பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ஆகவும் மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு RM2.15 என்ற உச்சவரம்பு விலையை அரசு பராமரித்து வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் பராமரிக்கப் படுவதை உறுதி செய்யத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :