HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் 324 பேர் பாதிப்பு- மரணச் சம்பவம் பதிவாகவில்லை

ஷா ஆலம், பிப் 3- நாட்டில் நேற்று மொத்தம் 324 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது.

நேற்று முன்தினம் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325ஆக இருந்தது. நேற்றைய நிலவரப்படி நாட்டில 10,073 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதைச் சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கத்தின் தரவுகள் காட்டுகின்றன.

அவர்களில் 9,653 பேர் அல்லது 95.8 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை மையங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் 408 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் வேளையில் அவர்களில் 12 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய்த் தொற்றிலிருந்து நேற்று 148 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 227ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்படவில்லை. இந்நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,942ஆக உள்ளது.


Pengarang :