SELANGOR

தீ விபத்தில் நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன – கோலா சிலாங்கூர்

ஷா ஆலம், பிப் 7: கோலா சிலாங்கூரில் உள்ள தாமான் ஸ்ரீ பெலிம்பிங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில், நான்கு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இவ்விபத்து பெர்மாத்தாங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களின் (ADN) கவனத்தைப் பெற்றது.

அதன் பிரதிநிதி ரோசானா ஜைனல் அபிடின் பாதிக்கப் பட்டவர்களுக்கு பண நன்கொடைகள் மற்றும் அவர்களின் சுமையைக் குறைக்க அடிப்படை உணவு பொருட்கள் உள்ளிட்டவையை வழங்க முன் வந்தார். இந்த உதவியால் பாதிக்கப்பட்டவர்களின் உடனடி சுமையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறேன்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

“இத் தீ விபத்து ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டன.

இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்க வீட்டில் உள்ள மின்கம்பிகளின் அமைப்பை எப்போதும் சரிபார்க்கவும் என ரோசானா நினைவூட்டினார்.

“மேலும், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சுவிட்ச் மூடப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், எனக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :