NATIONAL

பினாங்கு சர்வதேச விமான நிலையம் மற்றும் சுபாங் விமான நிலைய மேம்பாடு திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

ஷா ஆலம், பிப் 25: முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கப் பினாங்கு சர்வதேச விமான நிலையம் மற்றும் சுபாங் விமான நிலையத்தை அரசாங்கம் விரிவுபடுத்தும்.

RM7 பில்லியன் மதிப்பில் கூலிமில் புதிய விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தை விட மிகக் குறைந்த செலவில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நடவடிக்கை பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் கூறினார்.

“சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், கேரி தீவில் உள்ள முக்கிய துறைமுகத்தை தனியாரால் உருவாக்க முன்மொழியப் படுவதை அரசாங்கம் ஆதரிக்கிறது” என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்யும் போது கூறினார்.


Pengarang :