NATIONAL

புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக ஆயோப் கான் நியமனம்

கோலாலம்பூர், மார்ச் 29: புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற
விசாரணைத் துறை தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை
குற்றப்புலனாய்வுத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயோப் கானின் பதவி நியமனம் வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி
முதல் அமலுக்கு வருவதாக அரச மலேசிய போலீஸ் படையின்
செயலாளர் டதோ நோர்ஷியா சாடுடின் கூறினார்.

விரைவில் கட்டாய ஓய்வு பெறவிருக்கும் புக்கிட் அமான்
குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அப்துல் ஜாலில்
ஹசானுக்குப் பதிலாக ஆயோப் கான் அப்பொறுப்பை ஏற்பதாக அவர்
அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கடந்த 2020 மார்ச் 6ஆம் தேதி முதல் ஜொகூர் மாநிலப் போலீஸ்
தலைவராகப் பொறுப்பேற்ற ஆயோப் கான் (வயது 57) கடந்த 2021 டிசம்பர்
25ஆம் தேதி போதைப் பொருள் விசாரணைத் துறையின் இயக்குநராகப்
பொறுப்பேற்றார்.


Pengarang :