MEDIA STATEMENTPBT

 செந்தோசா தொகுதியின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் 1,000 பேர் கலந்து சிறப்பித்தனர்

கிள்ளான், மே 7- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள தாமான் செந்தோசா எம்.பி.கே. மண்டபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த விருந்தில் கலந்து கொண்ட மூவினங்களையும் சேர்ந்த விருந்தினர்கள் இங்கு பரிமாறப்பட்ட பல்வேறு உணவுப் பதார்த்தங்களை ருசித்து மகிழ்ந்ததோடு இசை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர்.

இந்த விருந்து நிகழ்வின் ஒரு பகுதியாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறார்களுக்கு நோன்புப் பெருநாள் ரொக்க அன்பளிப்புகள் வழங்கினார்.

சுங்கை கண்டீஸ் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான முகமது ஜவாவி அகமது முக்னி, போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி, தெக்குன் நேஷனல்  பெர்ஹாட்டின் தலைவர் டத்தோ அப்துல்லா சானி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

செந்தோசா தொகுதி ஏற்பாடு செய்துள்ள நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பின் முதலாவது மற்றும் பிரதான நிகழ்வாக இது அமைந்துள்ளது. இது தவிர மேலும் இரு பெருநாள் உபசரிப்பு நிகழ்வுகளுக்கு தொகுதி சேவை மையம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 13ஆம் தேதி நண்பகல் 12.00 முதல் மாலை 3.00 மணி வரை தாமான் மஸ்னா பாசார் மாலாம் பகுதியிலும் வரும் 21ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பண்டார் பொட்டானிக் டேவான் பொட்டானிக் பல்மாவிலும் நோன்புப் பொருள் உபசரிப்பு நடைபெறும்.


Pengarang :