ஷா ஆலம், பிப். 6 – பகாங் மாநிலத்தின் கோலாலம்பூர்-பெந்தோங் பழைய சாலையில் தரையிறங்கும் போது போக்குவரத்து ஹெலிகாப்டரில் தீப்பற்றியது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட வேளையில் மற்றொருவர் உயிர் தப்பினார்.
பெல் 206எல்-4 லோங் ரேஞ்சர் ரக ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட இந்த விபத்து சுடுநீர் ஊற்று பகுதிக்கு அருகில் நிகழ்ந்து. இந்த தீவிபத்தில் அந்த ஹெலிகாப்டர் முற்றிலுமாக அழிந்தது.
இந்த சம்பவத்தை பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹாம் முகமது கஹார் உறுதிப்படுத்தினார்.