NATIONAL

பிபிகேம் எனப்படும் மோட்டர் வாகன பரிசோதனை சேவைக்கு 3 நிறுவனங்கள் நியமனம்

புத்ராஜெயா, பிப் 8: பிபிகேம் எனப்படும் மோட்டர் வாகன பரிசோதனை சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த போக்குவரத்து அமைச்சு மூன்று நிறுவனங்களை நியமித்துள்ளது.

வாவாசான் பிந்தாங், பக்காத்தான் பெட்ரோலியம், பெரிமான் கோல்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு வணிக மற்றும் தனியார் வாகனப் பரிசோதனை சேவை வளாகங்களை திறக்க ஈராண்டுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சு மற்றும் சாலை போக்குவரத்து துறையின் முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் நிர்ணயித்த பிபிகேஎம் விண்ணப் வழிகாட்டிகளுக்கு ஏற்ப விண்ணப்பித்த 12 நிறுவனங்களிலிருந்து அம்மூன்று நிறுவனகளும் தேர்தெடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

குறுகிய காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களால் மேம்படுத்த முடிந்தால், அமைச்சு விரைவில் உரிமங்களை வழங்க தயாராக இருக்கும்.

புத்ராஜெயா போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லோக் அத்தகவல்களை கூறினார்.

பிபிகேஎம்யின் அனைத்து நிபத்தனைகள் மற்றும் செயல்பாட்டு தர விதிமுறைகள் இணங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் நடவடிக்கைகளை அமைச்சு ஜேபிஜே மூலம் கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.


Pengarang :