ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

 2 கோடியே 23 லட்சம் பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

ஷா ஆலம், நவ 20- நாட்டிலுள்ள பெரியவர்களில் 95.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 626 பேர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

நேற்று இரவு மணி 11.59 வரை இந்த எண்ணிக்கை பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும் 97.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 6 ஆயிரத்து 258 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 87.4 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 51 ஆயிரத்து 092 பேர் குறைந்தது ஒரு  டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 82.1 விழுக்காட்டினருக்கு அதாவது 25 லட்சத்து 84 ஆயிரத்து 612 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 105,103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி பெற்றவர்களில் 16,848 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும்  6,5489 பேர் முதலாவது தடுப்பூசியையும் 81,706 பேர் ஊக்கத் டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 42 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :