புத்ரா ஜெயா, மே 11- 2021 ஆம் ஆண்டிற்கான எஸ்.டி.பி.எம். மூன்றாம் தவணைத் தேர்வு மற்றும் 2021 ஆண்டு இரண்டாம் தவணைக்கான மறு தேர்வு ஆகியவை புதிய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக மலேசிய தேர்வு மன்றம் கூறியது.
2021 ஆம் ஆண்டு எஸ்.டி.பி.எம். 3 ஆம் தவணைக்கான தேர்வு மே மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளிலும் ஜூன் 13 முதல் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
அதே சமயம் 2021 எஸ்.டி.பி.எம், இரண்டாம் தவணைக்கான மறுதேர்வு ஜூன் மாதம் 16,20,21 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்தது.
எஸ்.டி.பி.எம். மூன்றாம் தவணைக்கான தேர்வு மே 18,19,24 மற்றும் 26 ஆம் தேதிகளிலும் இரண்டாம் தவணைக்கான மறு தேர்வு ஜூன் மாதம் 13,14,15 மற்றும் 16 ஆம் தேதிகளிலும் நடைபெற முன்பு திட்டமிடப்பட்டிருந்தது.
இத்தேர்வுகளின் புதிய தேதி தொடர்பான மேம்படுத்தப்பட்ட அட்டவணையை மலேசிய தேர்வு வாரியத்தின் www.mpm.edu.my என்ற அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.