ECONOMYSELANGOR

300 இளைஞர்களுடன் மந்திரி புசார் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்

ஷா ஆலம், ஏப் 15 –  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று இங்குள்ள தனது அதிகாரத்துவ இல்லத்தில் நடத்திய நோன்பு துறப்பு நிகழ்வில்  தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த  300 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

“இளம் தலைமுறையினருடன் நோன்பு துறப்பு” எனும் இந்த நிகழ்வில் இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் மற்றும் சிலாங்கூர் விளையாட்டு மன்ற நிர்வாக இயக்குனர் முகமட் நிஜாம் மர்ஜுக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சமூகப் பணிகளை மேற்கொள்வதற்காக  14 அரச சார்பற்ற அமைப்புகளுக்கும்  ஒன்பது இளைஞர் மாவட்ட மன்றங்களுக்கும் தலா வெ.5,000 மற்றும் வெ.3,000 நிதியை அமிருடின்  வழங்கினார்.


Pengarang :