ஷா ஆலம், ஏப்ரல் 10:
சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஆக இன்று குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 40-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தகவலின்படி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,148 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் மொத்த சம்பவங்கள் 4,346 ஆக இன்று அறிவிக்கப்பட்டது.