சுங்கை ராமால் தொகுதி ஏற்பாட்டில் 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 3- சுங்கை ராமால் தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த மாணவர்களுக்கு 15,000 வெள்ளி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

இந்த மடிக்கணினிகளை வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 28 ஆம் தேதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹார் தலைமையில் நடைபெற்றது.

தலா 1,500 வெள்ளி மதிப்பிலான எச்.பி. ரகத்தைச் சேர்ந்த இந்த மடிக்கணினிகள் விரைவில் உயர்கல்வியைத் தொடரவிருப்போர் உள்பட 10 மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக மஸ்வான் சொன்னார்.

இணையம் வாயிலாக கல்வி கற்பதற்கும் ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளர்கள் வழங்கும் பாடங்களை முடிப்பதற்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி இன்றியமையாதாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டு சிரமத்தில் உள்ள பெற்றோர்களின் சுமையை குறைக்கும் வகையில் இந்த உதவி அமையும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

இந்த மடிக்கணினியை ஆக்ககரமான வழிகளில் பயன்படுத்தும்படி மாணவர்களை கேட்டுக் கொண்ட அவர், கல்வி தவிர்த்து இணைய விளையாட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அவர்கள் இந்த உபகரணத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றார்.


Pengarang :