ஷா ஆலம், நவ 30- மலேசியாவில் நேற்று 1,672 புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ள வேளையில் 10 பேர் இந்நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இப்புதிய தொற்றுகளுடன் சேர்த்து மலேசியாவில் கோவிட்-29 நோய்த் தொற்றுக்கு இலக்காவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 90 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளது. நேற்று மிக அதிகமாக 619 கோவிட்-19 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவான வேளையில் கோலாலம்பூரில் 134 பேரும் கெடாவில் 133 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர். நேற்று 10 பேர் கோவிட்-19 நோயால் உயிரிழந்த வேளையில் இந்நோய்க்குப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,667 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் நேற்று 2,722 கோவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 27 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது. மாநில வாரியாக நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு- -சிலாங்கூர்: 619 -கோலாலம்பூர்: 134 -கெடா: 133 -சபா: 103 கிளந்தான்: 77 -மலாக்கா: 89 -பினாங்கு: 81 -சரவாக்: 80 -பேராக்: 66 -பகாங்: 46 -நெகிரி செம்பிலான்: 84 -திரெங்கானு: 57 -புத்ராஜெயா: 52 -ஜோகூர்: 39 -லாபுவான்: 9 -பெர்லிஸ்: 3