ஷா ஆலம், டிச 14 – நாட்டில் நேற்று 1,040 கோவிட்-19 சம்பவங்கள்
பதிவாகின. இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய 9 மரணச்
சம்பவங்களும் நேற்று பதிவு செய்யப்பட்டன.
நேற்றையத் தொற்றுகளுன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த்
தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 12 ஆயிரத்து
483 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சிலாங்கூரில் மிக அதிகமாக 335 பேரும் சரவாக்கில் 111 பேரும்
கோலாலம்பூரில் 89 பேரும் இந்நோயினால் பீடிக்கப்பட்டதாக சுகாதார
அமைச்சின் கோவிட்-19 அகப்பக்கம் கூறியது.
நாட்டில் நேற்று 1,456 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த
எண்ணிக்கை 49 லட்சத்து 58 ஆயிரத்து 525ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய மரணச் சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த்
தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,778 ஆக
உயர்ந்துள்ளது.
இதனிடையே, நாட்டில் நேற்று 17,547 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின்
தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 28 பேர் தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 18 பேருக்குச்
செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.