ஷா ஆலம், டிச 15- நாட்டில் நேற்று 1,241 கோவிட்-19 நோய்த் தொற்று
சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் மூன்று வெளிநாடுகளிலிருந்து
வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் தீவிர நோய் பாதிப்பை எதிர்
நோக்கியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 17,215 ஆகப்
பதிவாகியுள்ளது.
தீவிர தாக்கத்தைக் கொண்ட கோவிட்-19 நோயாளிகளில் 93.7
விழுக்காட்டினர் அல்லது 16,138 பேர் வீடுகளில்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நோயிலிருந்து நேற்று 1,567 பேர் குணமடைந்த வேளையில் இந்நோய்த்
தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 59 ஆயிரத்து
725ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய ஆறு மரணச் சம்பவங்கள்
நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்குப் பலியானவர்களின்
எண்ணிக்கை 36,787 ஆக அதிகரித்துள்ளது.