NATIONAL

டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் சென்று கண்டார் டத்தோ மந்திரி புசார் .

ஷா ஆலம், டிச 20: சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் டத்தோ நோராஸாம் காமிஸை செலாயாங் மருத்துவமனையில் டத்தோ மந்திரி புசார் சந்தித்துள்ளார்.

இன்று மதியம் 12.46 மணியளவில் மருத்துவமனையின் சுகாதார அதிகாரியுடன் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவரைக் காணச் சென்றுள்ளார்.

“டத்தோ நோராஸாம் காமிஸின் உடல்நிலை விரைவில் குணமடையட்டும்” என்று மந்திரி புசார் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

நேற்று மதியம் லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நோராஸாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியதில் இருந்து அவர் பத்தாங் காலியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Pengarang :