SELANGOR

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாக மீட்கப்பட்டது

ஷா ஆலம், டிச 27 : டிசம்பர் 24 முதல் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களின்
(எல்ஆர்ஏ) பணிகள் நிறுத்தப்பட்டதால் ஐந்து மாகாணங்களில் உள்ள 472 பகுதிகளில் நீர்
விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் இந்நிலை
முழுமையாக மீட்கப்பட்டது.

துர்நாற்றம் மாசு சம்பவத்தைத் தொடர்ந்து, பெட்டாலிங் (172 பகுதிகள்), உலு லங்காட்
(54 பகுதிகள்), சிப்பாங் (196 பகுதிகள்), புத்ராஜெயா (23 பகுதிகள்) மற்றும் கோலா
லங்காட் (27 பகுதிகள்) ஆகிய 472 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத்
தடைகளை ஏற்பட்டன..

ஆயர் சிலாங்கூர் இந்த திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடைக் காலத்தில் பயனர்களின்
பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறது.


Pengarang :