HEALTHNATIONAL

நேற்று 474 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- நால்வர் மரணம்

ஷா ஆலம், டிச 29- நாட்டில் நேற்று 474 பேர் கோவிட்-19
பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் அறுவர்
வெளிநாட்டுகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று
பதிவானதாக சுகாதார அமைச்சின் கேகேஎம் நாவ் அகப்பக்கம் கூறியது.
அவற்றில் ஒரு மரணச் சம்பவம் மருத்துவமனைக்கு வெளியே பதிவு
செய்யப்பட்டது.

நேற்று பதிவான மரணச் சம்பவங்களுடன் சேர்த்து இந்நோய்த்
தொற்றினால் பலியானவர்கள் எண்ணிக்கை 36,845 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்ட
நோயாளிகளின் எண்ணிக்கை 12,920 ஆக உள்ளது. அவர்களில் 12,213 பேர்
அல்லது 94.5 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள
வேளையில் மேலும் 666 பேர் மருத்துவமனைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 41 பேர் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேருக்குச் செயற்கை
சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :