தமிழர் சமூகத்திற்கு வளப்பத்தைக் கொண்டு வரும் திருநாள்- பிரதமரின் பொங்கல் வாழ்த்து

கோலாலம்பூர், ஜன 15- இன்று பொங்கல் விழாவைக் கொண்டாடும் நாட்டிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இனிய  பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இந்த திருநாள் அனைத்து மக்களுக்கும் வளப்பம், மகிழ்ச்சி, ஆரோக்கியத்தை வழங்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் தனது பேஸ்புக் பதிவின் வாயிலாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

வளங்கள்  பெருகியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் இந்த பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர். 

இது தவிர, இந்துக்களின் மிக முக்கியத் திருநாளாக விளங்கும் இந்த  பொங்கல் திருநாள், பழையவற்றை கழித்து புதியவற்றை புகுத்தும் தினமாகவும் புதிய மாற்றத்திற்கான தொடக்கமாகவும் விளங்குகிறது என அவர் கூறினார்.

தமிழர் ஆண்டின் பத்தாவது மாதமான தை மாதத்தில் வரும் இந்த பொங்கல் திருநாள் வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மிக முக்கியத்துவம் நிறைந்த நாளாக விளங்குகிறது என்று அவர் அந்த வாழ்த்து  செய்தியில் மேலும்  தெரிவித்தார்.


Pengarang :