NATIONAL

செங்கல்லைக் காட்டி வாகனமோட்டியைச் அச்சுறுத்திய சாலை ரவுடிக்குக் போலீஸ் வலை வீச்சு

கோலாலம்பூர், ஜன 23- தலைநகர், கெப்போங்கில் செங்கல்லைக் காட்டி வானமோட்டியை அச்சுறுத்தியாக நம்பப்படும் சாலை ரவுடியை போலீசார் தேடி 
வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட 
நபர் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யும்படி கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைமையகம் முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டது.

இந்த அச்சுறுத்தல் சம்பவம் கெப்போங், மெட்ரோ பிரிமா, ஜாலான் மெட்ரோ 1 சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்தவர்கள் 03-6274 2312 என்ற எண்களில் கெப்போங் போலீஸ் நிலையம் அல்லது   03-4048 2222 என்ற எண்களில் செந்தூல் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் 
கொள்ளப்படுகிறார்கள்.

ஆடவர் ஒருவர் செங்கல்லை கார் ஒன்றின் கண்ணாடியில் தட்டி அச்சுறுத்தும் காணொளி நேற்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.

Pengarang :