ஷா ஆலம், பிப் 14: கடந்த சனிக்கிழமை அன்று டீசல் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்ட ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) ஏற்பட்ட நீர் விநியோகத் தடை இன்று காலை 6 மணிக்கு முழுமையாக மீட்டமைக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் பெட்டாலிங் (369 பகுதிகள்), கோம்பாக் (278 பகுதிகள்), உலு சிலாங்கூர் (30 பகுதிகள்), கிள்ளான் மற்றும் ஷா ஆலம் (189 பகுதிகள்), கோலா லங்காட் (3 பகுதிகள்) மற்றும் கோலா சிலாங்கூர் (168 பகுதிகள்) ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டன.
“இந்த திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையின் போது பொறுமை காத்து மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பயனர்களுக்கு ஆயர் சிலாங்கூர் நன்றி தெரிவிக்க விரும்புகிறது” என்று முகநூலில் தெரிவித்துள்ளது.