HEALTHNATIONAL

நேற்று 164 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு –ஒருவர் மரணம்

ஷா ஆலம், பிப் 14- நாட்டில் நேற்று 164 கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் கண்டறியப்பட்டது.

நேற்று முன்தினம் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 164ஆக இருந்தது. கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.இந்நோய்க்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 36,952ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 9,310 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 96.4 விழுக்காட்டினர் அல்லது 8,978 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 321 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில 11 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேருக்குச் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :