NATIONAL

சிலாங்கூரை முன்மாதிரியாகக் கொண்டு மடாணி மருத்துவத் திட்டம்

கோலாலம்பூர், பிப் 24- வசதி குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரத்தியேக மடாணி மருத்துவத் திட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தவுள்ளது.

அத்தரப்பினர் சுகாதார மையங்கள் அல்லது தனியார் கிளினிக்குகளில் மருத்துவச் சிகிச்சைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த திட்டம் வழங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசு அமல்படுத்தியுள்ள மருத்துவத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்க மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கிலான இந்த திட்டத்திற்கு 12 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :