SELANGOR

உலு லங்காட்டில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 1: உலு லங்காட் பகுதியில் உள்ள பெர்சியாரன் பெகிலிலிங், செக்‌ஷன் 3, பண்டார் பாரு பாங்கியில் குழாய் உடைந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 14 பகுதிகளுக்கு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நீர் விநியோகம் முழுமையாகச் சீரமைக்கப்பட்டது.

நீர் விநியோகம் தடைப்பட்ட காலம் முழுவதும் பொறுமை காத்து மற்றும் ஒத்துழைப்பு வழங்கியப் பயனர்களுக்கு ஆயர் சிலாங்கூர் தனது நன்றியை முகநூல் மூலம் தெரிவித்தது.

நேற்று,  உலு லங்காட்டில் உள்ள 14 பகுதிகளில் குழாய் உடைந்த சம்பவத்தின் விளைவாகத் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :