ஷா ஆலம், மார்ச் 7- ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோரட்டோரியம் எனும் கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான சலுகையை ஆறு மாதங்களுக்கு வழங்க மே பேங்க் மற்றும் சி.ஐ.எம்.பி. ஆகிய வங்கிகள் முன்வந்துள்ளன.
மக்களவையில் இன்று அமைச்சர்களிடம் கேள்வி தொடுக்கும் நேரத்தின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
இன்று காலை 8.00 மணி நிலவரப்படி ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,620ஆக உள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 40,129ஆகப் பதிவாகியிருந்தது.