SELANGOR

மாநில அரசு எப்போதும் அதன் திட்டங்களை மேம்படுத்தும்

ஷா ஆலம், மார்ச் 8: தற்போதைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாநில அரசு எப்போதும்
அதன் திட்டங்களை மேம்படுத்தும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க
உதவும் ஜோம் ஷாப்பிங் வவுச்சரை மேம்படுத்தியது அரசு செய்த காரியங்களில் ஒன்று
என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும், முக்கிய பண்டிக்கை காலத்தின் போது சிலாங்கூர் மக்களுக்கு
ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கும் நோக்கத்திற்காக ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள்
வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் பண்டிக்கைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாட
முடியும், என்று அவர் இன்று தனது முகநூல் மூலம் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, வவுச்சர் மதிப்பு RM100 இலிருந்து RM200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
மற்றும் விண்ணப்பத்திற்கான குடும்ப வருமான வரம்பு RM2,000 லிருந்து RM3,000 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் சிலாங்கூர் மக்களுக்குப் பலன்களைத் தரும் என்று நம்புகிறேன்,” என்றார்.


Pengarang :