SELANGOR

தாமான் டெம்பளர் தொகுதியில் அதிக முறை மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது

செலாயாங், மார்ச் 6: தாமான் டெம்பளர் தொகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைக்கு இணங்கும் வகையில் இங்கு அதிக முறை மலிவு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த மாதம் எட்டு நாட்களுக்குள், சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேபிஎஸ்) ஆதரவுடன் அவரது தரப்பு ஐந்து முறை மலிவு விற்பனையை  ஏற்பாடு செய்ததாக ஒருங்கிணைப்பு அதிகாரி கூறினார்.

“மார்ச் மாதத்திற்காக, நாங்கள் ஏற்கனவே ஐந்து முறை மலிவு விற்பனையை ஏற்பாடு செய்துள்ளோம், மேலும் இன்னும் ஆறு முறைகள் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம், குறிப்பாக ரமலான் முன்னர் ஏற்பாடு செய்ய முயற்சி செய்வோம்” என்று ரோஸ்லி கமருடின் சிலாங்கூர்கினியை சந்தித்தபோது கூறினார்.

“இதுவரை, இந்நிகழ்வின் அட்டவணை இன்னும் அப்படியே உள்ளது மற்றும் ரம்டான் தொடங்கும் வரை வழக்கம் போல் இந்நிகழ்வு தொடரும், ஏதேனும் புதிய தகவல் இருந்தால் நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்,” என்று பிகேபிஎஸ் அதிகாரி ஃபராஹ்டினா ஹைருடின் கூறினார்.


Pengarang :