SELANGOR

80 சதவீத தொழில் முனைவோர் கடனைத் திருப்பிச் செலுத்துகின்றனர் – யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா)

ஷா ஆலம், மார்ச் 15: யாயசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) தொழில் முனைவோர் சுமார் 80 சதவீதம் பேர் ஏஜென்சி வழங்கும் பல்வேறு கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள்.

தொழில் முனைவோர் தங்கள் செயல்திறனை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளனர் என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன, குறிப்பாக கடனைத் திருப்பிச் செலுத்தும் போது என்று தலைமை செயல் முறை நிர்வாகி நார்மைசா யாஹ்யா கூறினார்.

“ஆரம்பக் கட்டத்தில், தொழில் முனைவோர் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கை மிகவும் நன்றாக இருந்தது, ஆனால் கோவிட்-19 தொற்று நோய் பரவிய போது, அது சற்று பாதிக்கப்பட்டது.

“வணிகங்கள் பாதிக்கப்படும்போது, தொழில்முனைவோர் பாதிக்கப்படுகிறார்கள், எனவே அவர்களால் கடன் உதவியைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை,” என்று அவர் கூறினார்.

நேற்று சிலாங்கூர் ஹிஜ்ரா 2023 வெற்றிப் பயணத் திட்டத்தில் சந்தித்த போது அவர், தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் சூழ்நிலையைத் தனது தரப்பு புரிந்து கொண்டு, இந்த விவகாரத்தைத் தீர்க்க நிதி மீட்புத் திட்டத்தை வழங்குவதாகக் கூறினார்.

“சிக்கல்களை எதிர்கொள்ளும் தொழில் முனைவோருக்கு நாங்கள் உதவி மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறோம்.

“மேலும், அவர்களின் நிதியுதவி தேவையை மறுபரிசீலனை செய்வோம், ஏனெனில் நாணயம் உள்ளவர்கள் தங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதை சரியாகச் செய்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வு ஹிஜ்ரா கடன் பெற்ற சிறந்த பங்கேற்பாளர்களின் செயல்திறன் மற்றும் சாதனைகளை  எழுத்து மற்றும் வீடியோ வடிவில் ஆவணப்படுத்துவது ஏஜென்சியின் திட்டமாகும்.


Pengarang :