SELANGOR

சூரிய சக்தி எல்இடி விளக்குகளை பயன்படுத்தி பில்களில் 50 சதவீதம் வரை சேமிப்பு

சிப்பாங், மார்ச் 20: இங்குள்ள தாமான் புத்ரா பெர்டானா பூச்சோங்கில் உள்ள செரோஜா அடுக்குமாடி குடியிருப்புகளின் கூட்டு மேலாண்மை அமைப்பு (ஜேஎம்பி) சூரியசக்தி எல்இடி விளக்குகளை பயன்படுத்திய பிறகு பில்களில் 50 சதவீதம் வரை சேமிக்க முடிந்தது.

அதன் பொருளாளர் முகமட் நசிருதின் ஓத்மான் கூறுகையில், 10 பிளாக்குகளை கொண்டு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 1,350 லைட்டிங் யூனிட்கள் உள்ளன. ஒரு மாதத்திற்கு RM10,000 பயன்பாட்டுச் செலவாகும்.

“இந்த எல்இடி விளக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்டன.  இதன் பயன்பாட்டால் பில்களை 50 சதவீதம் குறைக்க உதவியது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் கட்டமாக அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி முழுவதும் 56 மின்கம்ப விளக்குகளை நிறுவுவதை தொடர்வதன் மூலம் சேமிப்பைக் காணலாம்,” என்றார்.

சினெர்ஜி குரூப், சிஸ்டம், இந்த வித விளக்குகளை  சப்ளை செய்யும் நிறுவனமாக இருப்பதால், விளக்கு 10 ஆண்டுகள் வரை நல்ல முறையில் இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கிறது என முகமட் நசிருடின் மேலும் கூறினார்.

“பராமரிப்பு தேவையில்லை என்றால் 10 ஆண்டுகளுக்குள் RM500,000 க்கு மேல் சேமிக்க முடியும்.  “ஜேஎம்பியின் நிதிச் சுமையை குறைக்க கூடிய சேமிப்பைத் தவிர, பராமரிப்புப் பணிகளை செய்ய நாங்கள் இனி மனிதவளத்தை வழங்க வேண்டியதில்லை, குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை” என்று அவர் கூறினார்.


Pengarang :