NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் மாலை வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 20: மாலை வரை சிலாங்கூரில் ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங், உலு லங்காட், சிப்பாங், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என்று ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராக், திராங்கானு, நெகிரி செம்பிலான், பகாங், ஜொகூர், சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை தான் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும்  என  எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும். சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :