NATIONAL

பத்து பஹாட்டில் வெள்ளம் குறைந்து வருகிறது

ஜொகூர் பாரு, மார்ச் 22: பத்து பஹாட்டில் வெள்ளம் குறைந்து வருகிறது, இன்று காலை 8 மணி நிலவரப்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,540 ஆகக் குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று இரவு 3,086 பேராக இருந்தது.

மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு ஓர் அறிக்கையின் மூலம், மொத்தம் 701 குடும்பங்கள் இன்னும் 20 தற்காலிகத் தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்கியிருப்பதாகத் தெரிவித்தது.

இதற்கிடையில், பத்து பஹாட்டின் பல இடங்களில் வெள்ளத்திற்குப் பிந்தைய பணிகளுக்கு உதவுவதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 5,269 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.

இன்று காலை 10 மாவட்டங்களிலும் வானிலை தெளிவாக இருக்கும் என்றும், எந்த ஆறும் அபாய மட்டத்தில் இருப்பதாக பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :