NATIONAL

இன்று  இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மார்ச் 25: சிலாங்கூரில் உள்ள கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் இன்று  இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புத்ராஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பகுதிகளிலும் இதே வானிலை தான் இருக்கக்கூடும் என்று மெட்மலேசியா தெரிவித்தது.

“ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது, அது ஒரு மணிநேரத்திற்கு அருகில் அல்லது அதற்கு மேல் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :