SELANGOR

சிட்டிசன் மின்-பணம் (CEPat) பயன்பாடு மூலம் நில வரி செலுத்துதல், சரி பார்த்தல் சேவை

ஷா ஆலம், மார்ச் 29: நில வரி செலுத்துதல், சரிபார்த்தல் மற்றும் சிலாங்கூர்;நில சுரங்க அலுவலகம் (PTGS) மூலம் பில் செய்யப்படும் சேவைகள் இப்போது சிட்டிசன் மின்-பணம் (CEPat) பயன்பாட்டில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

மாநில மக்களின் நில வரி கணக்குகள் மற்றும் பெத்தாக்களை ‘எனக்கு பிடித்தவை’ பட்டியலில் சேர்ப்பதன் மூலம் வரி பில்களைப் பெறலாம் என்று சிலாங்கூர் நில சுரங்க அலுவலகம் தெரிவிக்கிறது.

“இந்த அமைப்பு சிலாங்கூர் மக்கள் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்குகிறது மற்றும் கணக்கு எண், நில வரி உரிமை ஐடி அல்லது ப்ளாட்டின் அடிப்படையில் ஒரு விண்ணப்பத்தைக் குறிப்பிடுவதன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும்.

“ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 முதல் மே 31 வரை ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தப்பட வேண்டும்” என்று முகநூலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிட்டிசன் மின்-பணம் பயன்பாடு தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்குத், தயவுசெய்து உங்கள் பெயர், தொலைபேசி எண், இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் ஐடியை ஹாட்லைன் 1700-81-1418 இல் தெரிவிக்கவும் அல்லது [email protected] இல் மின்னஞ்சல் செய்யவும்.


Pengarang :