SELANGOR

எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் அலுவலகம் ஏற்பாடு – ஷா ஆலம் மாநகராட்சி

 ஷா ஆலம், மார்ச் 30: ஷா ஆலம் மாநகராட்சி, எதிர்வரும் சனிக்கிழமை அன்று, பிளாசா மசாலாம் பிரிவு 9-ன் வாகன நிறுத்துமிடத்தில் நடமாடும் அலுவலகத்தை அமைக்கிறது.

இச்சேவை பொதுமக்களின் வசதிக்காக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும் என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

” இமி என்பது வார இறுதி நாட்களில் கவுண்டருக்கு வராமல் டீல் செய்ய ஷா ஆலம் மாநகராட்சியால் வழங்கப் படும் ஒரு தளமாகும்.

“இந்த நடமாடும் அலுவலகம், மதிப்பீட்டு வரியை மதிப்பாய்வு செய்து செலுத்துதல், வாகன நிறுத்துமிட அபராதத்தை பரிசீலனை செய்து செலுத்துதல், புகார் கவுண்டர் மற்றும் பல சேவை வசதிகளை வழங்கும்” என்று ஷாரின் அகமட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூகத்தின் நலனுக்காக ஷா ஆலம் மாநகராட்சி சேவை முறை மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது என்றார்.


Pengarang :