புத்ராஜெயா, ஏப்ரல் 18: நோன்புப் பெருநாளை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு இலவச டோல் கட்டணச் சலுகையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
இந்த இலவச டோல் கட்டணச் சலுகை இம்மாதம் 19 முதல் 21 வரையிலும் 24 ஆம் தேதியும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாகனமோட்டிகளுக்கு ஏற்படும் செலவினத்தை குறைக்கும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.