NATIONAL

நான் முதலில் ஓய்வெடுக்கிறேன்- டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகிறார்

புத்ராஜெயா, ஏப் 20- சுகாதார அமைச்சில் கடந்த 35 ஆண்டுகள்
பணியாற்றிய சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர்
நோர் ஹிஷாம் அப்துல்லா நாளை 21ஆம் தேதி தொடங்கி கட்டாயப் பணி
ஓய்வு பெறுகிறார்.

சுகாதார அமைச்சில் இறுதி நாளான நேற்று மாலை 4.17 மணியளவில்
தனது பணியை முடித்துக் கொண்ட அவர், அங்கு குழுமியிருந்த
நிருபர்களிடம் “நான் முதலில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்“ எனக்
கூறினார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா, சுகாதாத்
துணையமைச்சர் லுக்னிஸ்மான் அவாங் சவுனி மற்றும் அமைச்சின்
பணியாளர்கள் ஒன்று கூடி நோர் ஹிஷாமை வாழ்த்தி வழியனுப்பு
வைத்தனர்.

இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. கோவிட்-19
சம்பவங்களும் குறைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. நானும்
ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :