NATIONAL

நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராகக் கட்டுப்பாட்டுடன் உள்ளது

கோலாலம்பூர், ஏப்.22: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணி நிலவரப்படி பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டுடனும் காணப்பட்டது.

மலேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, வாகனங்களின் எண்ணிக்கை எந்த அதிகரிப்பையும் காட்டவில்லை என்றும், நெடுஞ்சாலையில் விபத்துக்களால் இதுவரை சாலை ஏதும் மூடப்படவில்லை என்றும் கூறினார்.

பிளஸ்லைன் கட்டணமில்லா லைன் 1800-88-0000 மற்றும் ட்விட்டர் www.twitter.com/plustrafik அல்லது LLM லைன் 1800-88-7752 மற்றும் www.twitter.com /llminfotrafik ட்விட்டர் மூலம் பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்து தகவலைப் பெறலாம்.

– பெர்னாமா


Pengarang :