NATIONAL

பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய 100 தற்காலிக அனுமதி 

ஷா ஆலம், ஏப்ரல் 22: பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளை விற்பனை செய்ய மொத்தம் 100 தற்காலிக  விண்ணப்பங்களுக்கு அம்பாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஏஜே) ஏப்ரல் 1 முதல் 11 வரை ஒப்புதல் அளித்துள்ளது.

ராயல் மலேசியன் காவல்துறையினர் (பிடிஆர்எம்) ஒத்துழைப்புடன் அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“ஒவ்வொரு பெர்மிட்டுக்கும் வசூலிக்கப்படும் கட்டணம், ஒரு வார வணிக காலத்திற்கு RM300, இரண்டு வாரத்திற்கு RM600 மற்றும் ஒரு மாதத்திற்கு RM1,200 ஆகும்.

“அனுமதி கொடுத்ததன் மூலம், நாங்கள் RM94,000 பெற்றோம்,” என்று அவர் அம்பாங் ஜெயா மாநகராட்சி கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

முகமட் ஃபௌசியின் கூற்றுப்படி, ஏப்ரல் 14 அன்று ஆபரேஷன் பூங்கா ஆப்பியின் சோதனை நடவடிக்கையின் போது அவரது தரப்பு இரண்டு அபராதங்களை வெளியிட்டுள்ளது.

“அனுமதியின்றி வர்த்தகம் செய்த குற்றத்துக்காகவும் உரிம நிபந்தனைகளை மீறியதற்காகவும் மொத்தம் 10 பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றும் அவர் கூறினார்.


Pengarang :