NATIONAL

சிலாங்கூரில் கோலா லங்காட், சிப்பாங் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஏப்ரல் 27: சிலாங்கூரில் கோலா லங்காட், சிப்பாங் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மற்றும் புத்ரா ஜெயாவில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலை இருக்கும் என முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) தெரிவித்துள்ளது.

மேலும், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலை தான் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி) க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :